உலகம்

வட இந்தியா & வங்காள தேசத்தில் வெள்ளம் : அறுவர் பலி

03/07/2024 08:11 PM

குவாஹாட்டி, 03 ஜூலை (பெர்னாமா) -- இந்தியா வடகிழக்கு பகுதி மற்றும் வங்காள தேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை அறுவர் பலியாகியுள்ளனர், 

அதே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை வெள்ளத்தில் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பேரிடர் அதிகாரிகளின் கூற்றுப்படி, மே மாதத்தில் இருந்து தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடந்த சில நாட்களில் நால்வர் பலியாகியதாக அசாம் மாநில வெள்ள அமலாக்கத் தரப்பு தெரிவித்தது.

இதனிடையே, வங்காளதேசத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ரோஹிங்கியா அகதிகள் உட்பட இருவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502