உலகம்

வங்காளதேசப் பிரதமர் இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் பயணம்

22/06/2024 07:25 PM

புது டெல்லி, 22 ஜுன் (பெர்னாமா) -- இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வங்காளதேசப் பிரதமர் ஷெய்க் ஹசினா இந்தியா சென்றுள்ளார்.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஷெய்க் ஹசினா இந்தியா வந்துள்ள முதல் வெளிநாட்டுத் தலைவராவார்.

தலைநகரில் உள்ள அதிபர் மாளிகையில் ஷெய்க் ஹசினாவுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.

இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், இவ்விரு தலைவர்களும் கலந்துரையாடவிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன.

பல ஆண்டுகளாக வங்காளதேசமும், இந்தியாவும் சுமுகமான உறவை கொண்டிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு அதனை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)