அரசியல்

அடுத்த பொதுத் தேர்தலில் இணைந்து பணியாற்றினால் தேமு, ந.கூ தனித் தனி சின்னங்களில் போட்டியிடும்

30/06/2024 07:30 PM

மாரான், 30 ஜூன் (பெர்னாமா) -- நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து தேசிய முன்னணி தொடர்ந்து செயலாற்றும்.

இருப்பினும், தேர்தலில் தேசிய முன்னணியும், நம்பிக்கைக் கூட்டணியும் தனது தனித் தனி சின்னத்திலேயே போட்டியிடும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அந்தந்தக் கட்சி சின்னங்களைப் பயன்படுத்துவதால் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உடன்பாட்டில் இருந்து விலகிச் செல்வதாக அர்த்தப்படாது.

மாறாக, தேசிய முன்னணி போட்டியிடும் தொகுதிகளில் நம்பிக்கைக் கூட்டணி, எதிர்த்து போட்டியிடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இன்று மாரான், பெக்கான் தாஜாவ் தொகுதி அம்னோ கூட்டத்தினை தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)