பொது

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ரம்லான் ஹருன் நியமனம்

26/06/2024 07:40 PM

கோலாலம்பூர், 26 ஜூன் (பெர்னாமா) -- தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர்-இன் புதிய தலைவராக டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருனின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதி 114 உட்பிரிவு ஒன்றின் கீழ், இந்த நியமனம் மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளதாக தேசிய தலைமைச் செயலாளர், டான் ஶ்ரீ முஹமட் சுகி அலி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தை சிறப்பாக வழிநடத்திய அதன் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் கானி சாலே, கடந்த மே 9-ஆம் தேதி கட்டாய ஓய்வுப் பெற்றார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, அப்துல் கானி தேர்தல் ஆணையத் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)