புது டெல்லி, 29 ஜூன் (பெர்னாமா) -- இந்தியா, புது டெல்லியில் பெய்த தொடர் கனமழையை அடுத்து விமான நிலையக் கூரையின் உள்கட்டமைப்புகளில் சேதம் உட்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், சில விமான பயணங்களில் தடை ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டன.
அதோடு, சுரங்க ரயில் பாதைகள் வெள்ளத்தால் சூழ்ந்திருப்பதோடு அது அந்நகரில் கடுமையான சாலை நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு கோடி மக்களைக் கொண்டிருக்கும் புது டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 228.1 மில்லிமீட்டர் அளவிலான மழை பெய்துள்ளது.
இது, வழக்க நிலையைக் காட்டிலும் 266 விழுக்காடு வேறுபட்டது என்று அதன் வானிலை ஆய்வு மையம் கூறியது.
கடந்த 15 ஆண்டுகளில், ஜூன் மாதம் டெல்லியில் இந்தளவில் மழை பொழிவு பதிவாகவில்லை என்றும் அம்மையம் தெரிவித்தது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]