பொது

வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி பெர்மிட் விண்ணப்பம் அதிகரித்துள்ளது

01/07/2024 07:25 PM

கோலாலம்பூர், 01 ஜூலை (பெர்னாமா) -- இவ்வாண்டில், மே 28 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி பெர்மிட், V-E-P-கான விண்ணப்பம் 23-ஆயிரத்து 649ஆக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு முழுவதிலும், அந்த எண்ணிக்கை 15-ஆயிரத்து 424-ஆகவே பதிவாகி இருந்ததை, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.

அதே காலக்கட்டத்தில் 6,120 VEP அட்டைகளே வெளியிடப்பட்ட வேளையில், அவற்றில் 1,080 அட்டைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

வாகன உரிமையாளர்கள் பதிவு எண்ணின் புகைப்படத்தை https://vepams.jpj.gov.my என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)